Thursday 19 January 2012

வணக்கம்..


அனைவருக்கும் வணக்கம்..

ந்த தேசமும் நம் மாநிலமும் எப்படி இருக்க வேண்டும் என மற்றவர்களுக்கு இருக்கும் கனவும் ஆசையும் எனக்கும் உண்டு. அரசியல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால் பல்வேறு தகவல்களைத் தெரிந்துக் கொள்வதில் மிகுந்த ஆவலாக இருக்கிறேன்.

நம் கனவுத் தமிழ்நாட்டை கட்டி எழுப்புவோம்.. குறைகளை மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல் தீர்வுகளையும் சொல்வோம். நம் கிராமப் புற வளங்கள், தேவைகள், பொருளாதாரம் பற்றியும் நகர்புற பிரச்சனைகள், தேவைகள், தீர்வுகள், மேம்பாட்டுப் பணிகள் பற்றியும் விவாதிக்கலாம். நம் கனவுத் தமிழ்நாட்டைக் கட்டி எழுப்ப விரும்பும் யாரும் இதில் பங்கு பெறலாம். கட்டுரைகள் எழுதலாம்.

விருப்பம் உள்ளவர்கள் தங்கள் ஊர்களைப் பற்றிய சிறப்புகளையும் எழுதலாம். மற்ற பகுதியினர் தெரிந்துக் கொள்ள வாய்ப்பாக அமையும்.

வெகுஜன பத்திரிக்கைகள் என சொல்லிக் கொள்ளும்
வணிகப் பத்திரிக்கைகள் தொடத் தயங்கும் செய்திகளை நாம்
எழுதுவோம். நம் பகுதிகளில் அதிகம் விளையும் விவசாயப்
பொருட்களையும் அவற்றிலிருந்து பெறப் படும் உபப் பொருட்களையும் அவற்றிற்கான சந்தைகளையும் கண்டறிந்து நம் மக்களுக்கு சொல்வோம்.

விவசாயத்திற்கும் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இருக்கும் சலுகைகள், வங்கிக் கடனுதவிகள், அரசாங்கத் திட்டங்களைக் கூடத் தெரிந்துக் கொள்ளாத லட்சக் கணக்கான மக்கள் இங்கே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தகவல்களை தந்து உதவலாம். தெரியாததை தெரிந்துக் கொள்வோம். தெரிந்ததை தெரியவைப்போம். தனிமனித தாக்குதல், அரசியல் காழ்புணர்வுகளை ஒதுக்கிவிட்டு நம் மக்களுக்குப் பயன்பெறும் அரிய கட்டுரைகளை எழுதி நம் சமூகக்  கடமையை ஆற்றுவோம். வாய்ப்புகள் அமையும் போது குழுவாக களப் பணிகளையும் மேற்கொள்வோம்.

இணைய நண்பர்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும்  எதிர்பார்க்கிறேன். வளமான தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்.

தொடர்புக்கு

eMail : dreamtamilnadu@gmail.com

அன்புடன்
சஞ்சய்காந்தி.

1 comments:

சஞ்சய்காந்தி,

MY Special wishes for you...,
Welcome to New Blogger world..,

Do your work as best..,

Post More and Every day...,

By.
VINISH KUMAR
www.notesforinterview.in

Post a Comment